ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை

by Staff / 16-11-2023 12:39:25pm
ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்த தீர்ப்பு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via