இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு
இலங்கையில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில் இடைக்கால அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங் பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச் சொத்துக்கள் பாதுகாப்பு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலை ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலை 19ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் நடந்துமுடிந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் நீக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :