மனைவி தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கொலை
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே வசித்து வரும் கந்தசாமி என்பவர் நள்ளிரவில் தனது மனைவி லட்சுமி மீது அம்மிக்கல்லைப்போட்டு கொலைச் செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த கொங்கணாபுரம் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கணவர் கந்தசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கந்தசாமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
Tags :