மார்க்கெட்டில் இளைஞர் படுகொலை

by Staff / 17-11-2023 03:03:10pm
 மார்க்கெட்டில் இளைஞர் படுகொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில் மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார்(25) என்பவர் மர்ம நபர்களால் தலை, மணிக்கட்டு, முகப்பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மது விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.மது விற்பனையில் ஏற்பட்ட போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via