பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

by Staff / 27-11-2023 02:24:36pm
பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற அடுத்த தினமே, 5டி திட்டத்தின் தலைவர் எனும் அமைச்சர் அந்தஸ்துடைய அரசு பதவி வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குறிய நபராக பாண்டியன் இருந்து வருகிறார்.

 

Tags :

Share via