சிறுமிக்கு பாலியல் தொல்லை

by Staff / 27-11-2023 02:22:35pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட குழிச்சல் பகுதியை சேர்த்த கூலி தொழிலாளிக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு , அதில் மூத்த பெண் குழந்தை 11-ஆம் வகுப்பிலும் , இரண்டாவது பெண் குழந்தை பத்தாம் வகுப்பிலும் படித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42 ) என்பவர் மூத்த பெண்குழந்தைக்கு நேற்று பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து கூலி தொழிலாளி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ்-ஐ போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via