8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.

by Editor / 23-04-2024 12:50:21am
 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம்  ஒரே நாளில், வெவ்வேறு வழக்குகளில், மூன்று பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது. தென்பாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் மணிகண்டன் என்பவருக்கு 10 ஆண்டுகளும், கோவில்பட்டியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகளும், திருச்செந்தூரில் 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜான்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

Tags : 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை.

Share via