கேட்பாரற்று கிடந்த 231 வாகனங்கள் அகற்றம்

by Staff / 01-10-2023 02:24:15pm
 கேட்பாரற்று கிடந்த 231 வாகனங்கள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக கேட்பாரற்று மக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி கடந்த செப். 1-ம் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் 1, 308 வாகனங்கள் கண்டறியப்பட்டு, 231 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்களையும் அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தேனாம்பேட்டை வெங்கட்ரங்கம் தெரு, பாரதி சாலையில் 2 வாகனங்கள் காவல் துறை உதவியுடன் நேற்று அகற்றப்பட்டன. இதை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேனாம்பேட்டை மண்டலக் குழு தலைவர் எஸ். மதன் மோகன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Tags :

Share via