கல்லூரி விடுதிக் காப்பாளர் தற்கொலை: போலீஸ் விசாரணை

by Staff / 18-04-2024 02:02:42pm
கல்லூரி விடுதிக் காப்பாளர் தற்கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகிலுள்ள ஓடக்கரையைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் அமுதன் (25) கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நாசரேத் தனியார் கல்லூரியில் இரவு நேர விடுதிக் காப்பாளராக பணியில் சேர்ந்தார். நேற்று அதிகாலையில் பணியை முடித்துவிட்டு தூங்க சென்றவர் விடுதிக்கு பின்னால் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து நாசரேத் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் டி. எஸ். பி. கென்னடி, நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via