தாயார் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் வெட்காளியம்மாள் (23). இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். அதிலிருந்து வெட்காளியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் .ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.
Tags :