கிணற்று தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி

by Staff / 18-04-2024 01:47:50pm
கிணற்று தண்ணீரில் மூழ்கி மாணவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் (16) இவர் சாத்தூரில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஊரின் அருகே இருக்கும் விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.ஹரீஸ்க்கு நீச்சல் தெரியாததால் குளிக்கும் போது கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியானர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்று நீரில் இருந்து மாணவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via