தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கரூர் எம்பி ஜோதிமணி

by Staff / 29-12-2022 02:47:46pm
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கரூர் எம்பி ஜோதிமணி

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்திரவிட்டுள்ள முதலமைச்சர், மு. க. ஸ்டாலின்
அவர்களுக்கு கரூர் எம்பி ஜோதிமணி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து ஒவ்வொரு ஆண்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.இம்முறையும் விவசாயிகளின் கரும்பு தமிழகமெங்கும் இனிக்க அரசு ஆவண செய்ய வேண்டும். முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு. என்று பதிவு செய்துள்ளார்

 

Tags :

Share via