இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

by Editor / 10-08-2023 10:04:35am
இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் 13ஆம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வினை ஆண்கள் 1,333 பேர், பெண்கள் 780 பேர் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர். கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் விரிவாக எழுதுதல் உள்ளிட்ட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது.

 

Tags : இன்று முதல் குரூப் 1 முதன்மைத் தேர்வு 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Share via