அட்லாண்டிக் கடலில் சென்ற 300 பேர் மாயம்

by Staff / 11-07-2023 12:41:18pm
அட்லாண்டிக் கடலில் சென்ற 300 பேர் மாயம் அட்லாண்டிக் கடலில் 3 படகுகளில் வந்த 300 புலம்பெயர்ந்தோர் திடீரென மாயமாகியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு செனகலில் இருந்து ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு படகில் 200 பேரும் மற்ற இரண்டு படகுகளில் 65 மற்றும் 60 பேரும் இருந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு உதவும் அமைப்பான வாக்கிங் பார்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளனர். <br /> &nbsp;
 

Tags :

Share via