ஈரான் வெடி விபத்து: 115 பேருக்கு மேல் காயம்

தெஹ்ரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 115க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன
Tags :