தமிழ்நாட்டில் உணவகத்துடன் கூடிய ரெஸ்ட் ரோ பார்களுக்கு அனுமதி வழங்க திட்டம்
தமிழ்நாட்டில் உணவகத்துடன் கூடிய ரெஸ்ட் ரோ பார்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல். சாதாரண டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையை குறைத்து வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு மதிப்பு கூட்டு வரியுடன் ரெஸ்ட்டோபர்களுக்கு அனுமதி வழங்க உள்ளது. வாட் வரிவிதிப்பு, முறையான உரிமங்கள் வழங்குவதின் மூலம் வருவாய் இழப்புகளை ஈடு கட்டி வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அரசால் அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்ட பின்பே இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
Tags :



















