நூல் விலையுயர்வை கண்டித்து, மே 16 முதல் 21 ஆம் தேதி வரை பொது வேலைநிறுத்தம்

by Editor / 02-05-2022 07:07:08pm
நூல் விலையுயர்வை கண்டித்து, மே 16 முதல் 21 ஆம் தேதி வரை பொது வேலைநிறுத்தம்

நூல் விலையுயர்வை கண்டித்து, மே 16 முதல் 21 ஆம் தேதி வரை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என திருப்பூர் அனைத்து தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் பனியன் நிறுவனங்கள் மட்டும் அல்லாது அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றபட்டன.இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் தேவைக்கு போக மீதம் இருக்கும் பஞ்சு மற்றும் நூலை மட்டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் , பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றபட்டன. .

 

Tags :

Share via