பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகள இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்

by Admin / 27-01-2022 12:39:34pm
பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகள  இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
 
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. 

இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருப்பதி- திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via