ஈரானின் பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல்
பெர்சிய வளைகுடா அருகே உள்ள மாஷார் பகுதியில் அமைந்திருக்கும் ஈரானின் முக்கிய பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 8) காலை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் ஆலை வளாகம் கடுமையான சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என ஈரான் அரசு ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
Tags :


















