குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தர் கூட்டம் அதிகரிப்பு.

by Editor / 17-12-2023 09:54:31am
குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தர் கூட்டம் அதிகரிப்பு.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை தாக்கம் இன்று காலை முதல் இலேசாக இருந்துவருகிறது.இருப்பினும் கடந்த ஒருவாரகாலமாக மழை இல்லாததின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து போதிய அளவில் இல்லையெனிழும் இங்குள்ள அருவிகளுக்கு நீர்வரத்து சீராக இருந்துவருகிறது. மேலும் குற்றாலம் பேரருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர் வரத்து சீராக காணப்படுகின்றது. இந்த நிலையில் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து பாதுகாப்பு வளையத்தை ஒட்டி கொட்டி வருவதின் காரணமாக குற்றாலம் பேரருவியில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும்,சென்றுவிட்டு திரும்பும் ஐயப்ப பக்தர் களும் அதிகாலை முதலில் திரண்டு வந்து குற்றாலம் பேரருவியில்குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இன்று விடுமுறைதினமென்பதால் குற்றாலம் பேரருவிப்  பகுதி முழுவதும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தர் கூட்டம் அதிகரிப்பு.
 

Tags : குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தர் கூட்டம் அதிகரிப்பு.

Share via