போதைப் பொருள் விற்ற காவலர் மகன் உட்பட 4 பேர் கைது.

by Admin / 07-03-2022 01:23:33pm
போதைப் பொருள் விற்ற காவலர் மகன் உட்பட 4 பேர் கைது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது புது வண்ணாரப்பேட்டையில் கஞ்சா பொருட்களை விற்பனை செய்த ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரை வைத்து அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீதமுள்ள 3 பேரையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராயபுரத்தைச் சார்ந்த காதர்மொய்தீன் தண்டையார்பேட்டை  பகுதியைச் சார்ந்த நாகூர் அனிபா மற்றும் பெரம்பூர் பகுதியைச் சார்ந்த சேக் முகம்மது என்பது தெரியவந்தது,

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரில் மணிகண்டன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் சரவணன் என்பவரது மகன் என்பதும் தெரியவந்துள்ளது. காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவலர் மகன் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் மெத்த கேட்டமைன் என்ற ஐஸ் போதைப் பொருள் ஆகியற்றை பறிமுதல் செய்தனர். மெத்த கேட்டமைன் என்ற கஞ்சா பொருளானது ஒரு கிராம் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via