கஞ்சா வழக்கில் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

by Staff / 29-12-2022 03:01:48pm
கஞ்சா வழக்கில் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோமதி பாய் காலனி தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சேர்மத்துரை (24) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சேர்மத்துரையை கைது செய்து அவரிடமிருந்த 70 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via