Z’ பிரிவு பாதுகாப்பு வேண்டாம்: அண்ணாமலை
புதிய கட்சியை தொடங்கியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் ‘Z’ பிரிவு பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தற்போதைய சூழலில் தனக்கு மாநில அரசு வழங்கும் பாதுகாப்பே போதுமானது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :



















