லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நற்பவளக்குடி நடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் கிருஷ்ணன் (66). இவர் தனக்கு சொந்தமான லாரியை அறந்தாங்கி வாரச்சந்தை அருகே நிறுத்தி வைத்துள்ளார்.இந்நிலையில், லாரியின் முகப்பு பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :