போலீஸ் கன்னத்தில் அறைந்த வட மாநில லாரி டிரைவர்

by Editor / 31-08-2021 12:00:51pm
 போலீஸ் கன்னத்தில் அறைந்த வட மாநில லாரி டிரைவர்

 போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலை உள்ளது.

இங்கு, மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதை பார்த்ததும், அதனை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியினால் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்து உள்ளார். போலீசார் கூறியதை ஏற்க மறுத்த ஓட்டுனர் முஸ்தாக் அகமது என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், போக்குவரத்து காவலரை சற்றும் எதிர்பாராத விதமாக சட்டென்று, அறைந்துள்ளார். தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி ஓட்டுநர் முஸ்தாக் அகமது காவலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார், லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, ஆபாசமாக பேசியது என பின்வரும் 794/21 U/s 294(b), 332, 506 (ii) IPC மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.போரூர் சர்வீஸ் சாலை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை-கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்கு வரை லாரி போயிருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் அதற்கு முன்பாக குழம்பிய பகுதியில் சிக்கிக் கொண்ட லாரி டிரைவர் இப்போது வம்பிலும் மாட்டியுள்ளார்.தற்போது சென்னை மெட்ரோ பாலம் பணிகள் போரூரில் நடைபெற்று வருவதால் அனைத்து பாதையும் குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ரொம்பவே குழப்பம் அடைகிறார்கள். உள்ளூர்காரர்களே குழம்பும் நிலையில் பிற மாநில டிரைவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை

 

Tags :

Share via