நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்த அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
மதுரையில் வாகனதணிக்கையின்போது நிற்காமல் சென்ற சரக்கு வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வண்டியூர் சோதனைச்சாவடி அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த டாட்டா ஏஸ் வாகனம் அவர்களை கண்டபின் நிற்காமல் சென்றது. அதனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து வாகன ஓட்டுநர் காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags :