ஒரே வீட்டை குறிவைத்து திருடும் திருடர்கள்

by Staff / 17-10-2024 04:21:15pm
ஒரே வீட்டை குறிவைத்து திருடும் திருடர்கள்

சிவகங்கையை சேர்ந்த தம்பதி சின்னையா, சரசு. இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சின்னையாவை தாக்கிவிட்டு, அவரது மனைவி சரசுவின் காதை அறுத்து கம்மலை திருடிச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இதே போல சரசு வீட்டிற்கு புகுந்து 10 சவரன் நகையை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via