நாங்குநேரி சம்பவம் நெஞ்சம் பதறச் செய்கிறது

by Staff / 12-08-2023 01:42:03pm
நாங்குநேரி சம்பவம் நெஞ்சம் பதறச் செய்கிறது

நெல்லை, நாங்குநேரி சம்பவத்திற்கு அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சை பதறச்செய்கிறது. பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via