மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் 

by Editor / 21-07-2023 11:50:57am
மணிப்பூர் மாநிலத்தில்  பாலியல் வன்கொடுமை மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனைக்கண்டித்து மன்னார்குடி அரசு கல்லூரி வாயிலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மணிப்பூர் மாநிலத்தில் இளம்பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி அரசு கல்லூரி வாயிலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்  . நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

Tags :

Share via