மனைவியை கொன்று வீட்டிற்கு தீ வைப்பு

by Staff / 21-01-2023 11:10:14am
மனைவியை கொன்று வீட்டிற்கு தீ வைப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அனில் பாதேல், அவரது மனைவி அனிதாவும் சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கணவர் மீது கோபமடைந்த அனிதா, கையில் வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் அனிலை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ வைத்தார். தீயில் மனைவியின் உடல் கருகியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via