போதைப்பொருள் கடத்தல் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர்

by Staff / 02-04-2024 11:47:16am
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இயக்குநர் அமீர் ஆஜரானார். ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று ஆஜரானார். தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து அமீரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமீர் இயக்கி வரும் 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via