நெல்லையில்  விஷவாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கம்;

by Editor / 29-06-2021 07:39:42pm
நெல்லையில்  விஷவாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கம்;

 

நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் அருகே வடுகன்பட்டி என்ற இடத்தில் தனியார் பேப்பர் ஆலை செயல்பட்டு வருகிறது. பழைய பேப்பர் மற்றும் அட்டைகளை வாங்கி வந்து அவற்றை கூழாக்கி புதிய பேப்பர் தயாரிக்கும் பணி நடக்கிறது.
அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் இன்று அங்குள்ள பழைய பேப்பர் கழிவுகள் கிடந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த தொட்டிக்குள் இருந்து விஷவாயு வெளியேறியிருக்கிறது.
தொட்டியில் இருந்து நீர்க்குமிழிகள் போல வெளியேறிய விஷவாயுவை சுவாசித்த ராஜா (44 ) காளிமுத்து (33) மாரியப்பன் (55) செல்லப்பா (48) ஆகிய நால்வருக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு நால்வரையும் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via