சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை

by Admin / 10-12-2023 01:25:16pm
 சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை

ராஜபாளையம் அருகே உள்ள சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, அமாவாசை, பௌர்ணமி போன்ற காலங்களில் சுந்தரலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவதை ஒட்டி பக்தர்களுக்கு வனத்துறையும் கோவில் நிர்வாகமும் அனுமதி வழங்கும் .ஆனால், தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து கொண்டிருப்பதின் காரணமாக, கார்த்திகை மாத பிரதோஷமான இன்றும் செவ்வாய்க்கிழமை கார்த்திகை அமாவாசை வருவதை ஒட்டியும் பக்தர்கள் வழிபாட்டிற்காக சுதந்திர மகாலிங்க சுவாமி கோவிலில்  வழிபடுவதற்கு வனத்துறையினர்மூன்று நாள்கள் தடை விதித்துள்ளனர்.. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரதோஷ வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 சதுரகிரி ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை
 

Tags :

Share via

More stories

Logo