எங்களை துன்புறுத்த எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை: முகமது முய்சு

by Staff / 14-01-2024 02:31:10pm
எங்களை துன்புறுத்த எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை: முகமது முய்சு

இந்தியா-மாலத்தீவு பிரச்சனையின் சூழலில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர், எங்களை துன்புறுத்த எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றார். 'நாங்கள் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் அது எங்களை அச்சுறுத்துவதற்கான உரிமத்தை உங்களுக்கு வழங்காது' என்று அவர் இந்தியாவை மறைமுகமாக சாடியுள்ளார். மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், லட்சத்தீவு மக்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via