18 பசுக்கள் மீது ஆசிட் ஊற்றிய மூதாட்டி.. அதிர்ச்சி தகவல்

by Staff / 13-12-2023 01:31:42pm
18 பசுக்கள் மீது ஆசிட் ஊற்றிய மூதாட்டி.. அதிர்ச்சி தகவல்

பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோசப் கிரேஸ் (76). இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஜோசப் கிரேசிடம் கேட்டபோது, கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை ஊற்றியதாக தெரிவித்துள்ளார். தனது இடத்தில் பசுக்கள் மேய்வதாலே ஆசிட் ஊற்றியதாகவும் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த உரிமையாளர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆசிட் ஊற்றியதில் 18 பசுக்களும் படுகாயம் அடைந்துள்ளன.

 

Tags :

Share via