தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் : அர்ஜூன் சம்பத்

by Editor / 13-07-2021 06:34:55pm
தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் : அர்ஜூன் சம்பத்

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி முருகானந்தம் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் அவரை சந்திக்க வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி முருகானந்தம் தாக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்கிறோம் மேலும் நெல்லையப்பர் திருக்கோவிலில் 17 ஆண்டுக்கு பின்னர் 3 வாயில்கள் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது் தென் மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்கான எந்த திட்டமும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில் தற்போது அது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கொங்கு மாநிலம் அமையவேண்டும் என்ற கருத்தும் தற்போது வலிமை பெற்றுள்ளது.இது போன்ற கருத்துக்கள் பிரிவினை வாதம் இல்லை மாநிலத்தை பிரித்தால் அது நிர்வாகம் செய்ய வசதியானதாக இருக்கும் நிர்வாக வசதிக்காக தான் மாநில பிரிப்பை கேட்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் மாநில பிரிவினை முன்னெடுக்கப்படுகிறது தென்மாவட்டங்கள் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.தென்மாவட்டங்கள் தேச விரோத சக்திகள் ஊடுருவி வளர்ச்சியை தடை செய்கின்றனர். தமிழகத்தை மூன்றாக பிரித்து 3 மாநிலங்கள் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முழு காரணம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான்  எனவும் தெரிவித்தார். லியோனியை பாடநூல் கழக தலைவராக்கியது  கண்டனத்துக்கு உரியது மத்திய அரசை எதிர்த்தவர்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது  எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via