தேர்தல் பத்திரங்களுக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Staff / 15-02-2024 12:14:11pm
தேர்தல் பத்திரங்களுக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மனுக்களை விசாரித்த அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். அந்த தீர்ப்பில், கட்சிகளுக்கு யார் பணம் அளிக்கிறார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும். அதன் வெளிப்படைத் தன்மை அவசியம். கறுப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிப்பதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. கறுப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் ஒரு வழியல்ல. தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம் என கருத்து தெரிவித்து அதற்கு தடை விதித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories