புல்வாமா தாக்குதல் - இன்று 5ஆம் ஆண்டு நிறைவு

by Staff / 14-02-2024 11:55:07am
புல்வாமா தாக்குதல் - இன்று 5ஆம் ஆண்டு நிறைவு

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரமான தாக்குதல் நடந்து 5ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் தாக்கம் இன்று வரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் மறையாத வடுவாக உள்ளது. பிரதமர் மோடி X தள பக்கத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via