8 வயது சிறுமி பலாத்காரம் - கொடூரன் கைது

by Staff / 08-09-2023 10:58:02am
8 வயது சிறுமி பலாத்காரம் - கொடூரன் கைது

கேரளாவின் எர்ணாகுளம் ஆலுவாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டன்பூரில் வீட்டில் இருந்து எட்டு வயது சிறுமியை கிறிஸ்டில்ராஜ் வியாழக்கிழமை காலை கடத்திச் சென்றார். பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள வயலில் விட்டுவிட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார். ஒரு ஹோட்டலில் இருந்த குற்றவாளியை போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பியோடினார். ஆனாலும் பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via