வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மல்லை சத்யா.

மதிமுக-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். வைகோவின் மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்த பிறகு இது தலைகீழாக மாறியது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இந்நிலையில் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி பல்வேறு புகார்களை வைகோ கூறினார். இதையெல்லாம் மறுத்த மல்லை சத்யா வைகோவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். ஆக.2இல் சென்னையில் போராட்டம் நடத்த போலீசில் மனு அளித்துள்ளார்.
Tags : Mallai Sathya raises the flag of war against Vaiko.