கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி முதல்வர் கடிதம்

by Staff / 19-12-2023 03:38:42pm
 கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி முதல்வர் கடிதம்

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் ஹெகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெகாப்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via