இந்தி தேசிய மொழி.. பீகார் முதல்வரால் பரபரப்பு

by Staff / 20-12-2023 03:05:18pm
இந்தி தேசிய மொழி.. பீகார் முதல்வரால் பரபரப்பு

டெல்லியில் நேற்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசியபோது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அப்போது பேசிய நிதிஷ் குமார் "இந்தி தேசிய மொழி. எல்லோருக்கும் இந்தி புரிய வேண்டும். ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியர்கள் மீது திணித்தது" என கோபமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மற்ற தலைவர்கள் நிதிஷ் குமாரை சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via