மத்திய, மாநில அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

by Staff / 09-08-2024 04:21:50pm
மத்திய, மாநில அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது X தள பக்கத்தில், "இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் நிரந்தர தீர்வை எட்டுமாறு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், மத்திய அரசிடமும் உரிய அழுத்தத்தை அளிக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via