"F4 கார் பந்தயம் அவசியம் தானா?" - சீமான் கண்டனம்

by Staff / 09-08-2024 04:29:27pm

விருதுநகரில் இன்று (ஆக.9) நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் போராடி வரும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி இல்லை. மின்சார வாரிய கடனை அடைக்க மின் கட்டணத்தை உயர்த்தும் சூழலில் அரசுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் அவசியம்தானா?. மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம்?. பகட்டுக்காக, பொழுதுபோக்கிற்காக கார் பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via