திருமண விழாவில் சிறுவர்கள் கடத்தல்

by Staff / 03-05-2024 05:29:15pm
திருமண விழாவில் சிறுவர்கள் கடத்தல்

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை அனீஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிடிகளை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர்கள் 9, 7 மற்றும் 3 வயதுடைய மூன்று சிறுவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via