16 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியை கைது

மும்பையில் 16 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவுகொண்ட 40 வயது ஆசிரியை போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார். பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிய அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அதே பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவனுடன் 2024 முதல் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதற்கு ஆசிரியையின் தோழியும் உடந்தையாக இருந்துள்ளார். மாணவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது உண்மை தெரியவரவே, போலீசில் அளித்த புகாரால் ஆசிரியை சிக்கியுள்ளார்.
Tags :