மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை 

by Editor / 11-05-2022 01:50:17pm
மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 
   
பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.

இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம்  என இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

 

Tags : There is no truth in the report that Mahinda Rajapaksa fled with his family

Share via