பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை நடிகர் விஷாலுக்கு லைகா நிறுவனம்

by Staff / 12-10-2023 02:34:46pm
பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை நடிகர் விஷாலுக்கு லைகா நிறுவனம்

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிட கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 2021 முதல் ரூ.80 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்துள்ள விஷால் வேண்டுமென்றே தங்களுக்கு தர வேண்டிய தொகையை செலுத்தாமல் இருக்கிறார் என லைகா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருக்கிறோம், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via