பள்ளி மாணவியிடம் தவறாக நடந்த வாலிபர் கைது

by Staff / 12-01-2023 12:47:29pm
பள்ளி மாணவியிடம்  தவறாக நடந்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஒன்பதாம் தேதி அருகில் உள்ள கடையில் பேனா வாங்குவதற்காக சிறுமி சென்றுள்ளார் அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பாரதியார் தெரு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பின்புறம் குடியிருந்து வரும் செந்தில் என்பவர் மகன் ஹரிஹரன் வயது 21 இவரும் இவரது நண்பர் ருத்ரேஸ்வரனும் மாணவியை கேலி கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர் உடனடியாக அவரது பெற்றோரிடம் தெரிவிக்கவே மாணவியின் பெற்றோர்கள் கடையின் அருகே நின்று கொண்டிருந்த ஹரிகரன் மற்றும் ருத்ரேஸ்வரன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டுள்ளனர் அப்போது மாணவியின் பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இதனை எடுத்து மாணவியின் தாய் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஹரிஹரனை போக்சோ சட்டத்தில் கைது சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஹரிகரனின் நண்பரான ருத்ரேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via