பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பற்களில் Braces பொருத்தம்

விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு, 'மலரும் புன்னகை' என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக Braces பொருத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறுகையில், “இந்த Braces பொருத்த தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.30,000 வரை செலவாகும். இந்த சிகிச்சையை, சிஎஸ்ஆர் நிதியின் உதவியுடன் மேற்கொள்வதற்காக 600 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
Tags :